Friday 3rd of May 2024 04:45:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
அதிபரின் குறுந்தகவலுடன்  ஆசிரியர்கள் மாகாணங்களுக்கிடையில் பயணிக்கலாம்- கல்வி அமைச்சு!

அதிபரின் குறுந்தகவலுடன் ஆசிரியர்கள் மாகாணங்களுக்கிடையில் பயணிக்கலாம்- கல்வி அமைச்சு!


நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளுவது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.. இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத் தடையும் ஏற்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது..


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE